ஒற்றைப்படை...இரட்டைப்படை எண் கார் சோதனை ஓட்டம் எதிரொலி: மெட்ரோ ரயிலில் அலைமோதும் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் தினசரி நாட்களில் ஒற்றை, இரட்டைப்படை எண் கார்கள் சோதனை முறையில் இயக்கப்படும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

டெல்லியில் கடுமையான காற்று மாசுப்பாடு நிலவுகிறது. இதை குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிகைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒற்றைப்படை பதிவு எண்களை கொண்ட கார்களை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இயக்க வேண்டும்.

crowd in delhi metro station

அதேபோல் இரட்டைப்படை எண்களை கொண்ட கார்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கார்களையும் இயக்கலாம் என டெல்லி மாநில புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் தற்போது சோதனை முறையாக 15 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெரும்பாலானவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, மெட்ரோ ரயில்களில் ஒரே நேரத்தில் பயணித்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

கடந்த 1ஆம் தேதி முதல் அலுவலகங்கள் விடுமுறை என்பதால் மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் காணப்படவில்லை. ஆனால், விடுமுறைக்குப் பின்னர் நேற்று பணிக்கு செல்வோர் கூட்டம் அலைமோதியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+