பணத்தட்டுப்பாடுக்கு காரணம் என்ன? அருண் ஜேட்லி விளக்கம்
போதுமான அளவுக்கு பணப்புழக்கம் உள்ளதாகவும் தட்டுப்பாடு என்பது தற்காலிகம்தான் என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: வங்கிகளில் தேவையான அளவுக்கு பணம் உள்ளதாகவும், போதுமான பணம் புழக்கத்தில் உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தின் கிழக்கு பகுதி, பீகார் மற்றும் குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் நேற்று முதல் ஏடிஎம்களில் பணம் இல்லை. அதுபோல் ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக பணம் இல்லாமல் ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன.

இந்த நிலையில் இன்றும் பல்வேறு பகுதிகளில் பணம் இல்லாமல் இருந்ததாக ஏடிஎம் சென்றவர்கள் தெரிவித்தனர். தமிழகத்திலும் ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் இல்லை என்று புகார்கள் எழுந்தன.
Have reviewed the currency situation in the country. Over all there is more than adequate currency in circulation and also available with the Banks. The temporary shortage caused by ‘sudden and unusual increase’ in some areas is being tackled quickly.
— Arun Jaitley (@arunjaitley) April 17, 2018
கடந்த 3 தினங்களாக பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், நாடு முழுவதும் பணம் விவகாரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களில் தேவைக்கு அதிகமான அளவில் பணப் புழக்கம் இருந்து வருகிறது. அதே போல் வங்கிகளில் பணம் இருக்கிறது. இந்த பணத்தட்டுப்பாடு தற்காலிகம்தான். சில பகுதிகளில் பணத்தேவை அதிகரித்ததால் இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications