ஹீரோ சைக்கிள் நிறுவனர் “சைக்கிள் கிங்” ஓம் பிரகாஷ் முஞ்சால் மரணம்
லூதியானா: சைக்கிள் கிங் என்று அழைக்கப்படும் ஹீரோ சைக்கிள் நிறுவனத்தின் நிறுவனரான ஓம் பிரகாஷ் முஞ்சால் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார்.
87 வயதான ஓம் பிரகாஷ் முஞ்சால் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள டி.எம்.சி ஹீரோ இதயநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார்.

மறைந்த முஞ்சாலுக்கு ஒரு மகனும், 4 மகள்களும் உள்ளனர். முஞ்சாலின் இறுதிச் சடங்குகள் பஞ்சாப்பில் இன்று நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். முஞ்சால் இந்தியாவின், சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களின் தந்தை என்று அழைக்கப்படுகின்றார்.
முஞ்சாலின் மறைவுக்கு பஞ்சாப் முதல்வர் பாதலும், மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் புகழ்பெற்ற சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ விளங்கி வருகிறது. உலகின் மிகப்பெரிய சைக்கிள் நிறுவனம் என்ற பெருமையை 1986ல் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று பிடித்தது இவருடைய நிறுவனம்.












Click it and Unblock the Notifications