Cyclone Biparjoy: ஹை ஸ்பீடை தொட்ட பைபர்ஜாய் புயல்.. 125 கிமீ-இல் குஜராத்தை தாக்கியது! இவ்ளோ பெருசா
காந்திநகர்: அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த பைபர்ஜாய் புயல் குஜராத்தின் கடலோர பகுதிகளில் கரையை கடந்து வரும் நிலையில் தற்போது அதன் அதிகபட்ச வேகம் என கணிக்கப்பட்ட 125 கிலோ மீட்டரை தொட்டு இருக்கிறது.
அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான பைபர்ஜாய் புயல் கேரளா கடலோர பகுதிகளில் நிலைகொண்ட நிலையில், கர்நாடகா, கோவா, மகாராஷ்டிராவை ஒட்டிய கடலோர பகுதிகளை கடந்து குஜராத் மாநில கடலோர பகுதிகளில் நிலை கொண்டது. பாகிஸ்தானில் இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நூலிழையில் அந்த புயல் நகர்ந்து குஜராத்தை ஒட்டிய கடலோர பகுதிகளில் தற்போது கரையை கடந்து வருகிறது. இரவு 9 மணிக்கு புயலின் வெளிப்புற பகுதி குஜராத்தை ஒட்டிய பகுதிகளில் கடக்க தொடங்கியது. முன்னதாக குஜராத்தின் கடலோர பகுதிகளில் மற்றும் பாகிஸ்தான் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

புயல் கரையை கடப்பதற்கு முன்பாகவே துவாரகா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "நேற்று (14.06.2023) வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர புயல் "பைபர்ஜாய், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (15.06.2023) காலை 08:30 மணி அளவில் அதே பகுதிகளில், ஜக்காவு துறைமுகத்திலிருந்து (குஜராத்) மேற்கு - தென்மேற்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில், தேவ்பூமி துவாரகா (குஜராத்) இருந்து மேற்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து மேற்கு-வடமேற்கே சுமார் 290 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் இன்று (15.06.2023) மாலை மிகத்தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்) - மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 115-125 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும்." என்று தெரிவித்து இருந்தது.

இதற்கு முன்பாக 125 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடக்கும் என்றே எச்சரித்து இருந்தது வானிலை ஆய்வு மையம். இந்த நிலையில் மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை புயலின் வெளித்தோற்றம் தொட்டது. இந்த நிலையில் இந்த வேகம் படிப்படியாக அதிகரித்து 115 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
இந்த நிலையில் புயலின் கண் பகுதி குஜராத்தின் நாலியா, மண்ட்வி, துவாரகா, சலாயா, ஜாம்நகர் உள்ளிட்ட கடலோர பகுதிகளை தொட்டு இருக்கிறது. தற்போது காற்றி வேகமும் மணிக்கு 125 கிலோ மீட்டரை தொட்டு இருப்பதால் அங்கு பெரும் சேதம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications