Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாய்லின் புயல் ஆந்திரா, ஒடிஷாவை தாக்கியது! 250 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று!!

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: மிகப் பெரிய புயலான பாய்லின் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மற்றும் ஒடிஷாவின் கோபால்பூரைத் தாக்கியது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 250 கிலோ மீட்டர் பலத்த சூறாவளி வீசியது.

நேற்று மாலை 6 மணி அளவில் ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென்கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது. இந்த புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மாலை 6 மணி தொடக்கம் முதல் கரையை நெருங்கியது. பின்னர் இரவு 7.55 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தை பேரிரைச்சலுடன் தாக்கியது.

இதைத் தொடர்ந்து ஒடிஷாவின் கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளையும் பெரும் சூறாவளியை சுமந்து கொண்டு பதம் பார்த்தது பாய்லின் புயல். மணிக்கு 250 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி வீசியது. மழையும் பேய் மழையென கொட்டியது,

இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. கடலில் பல அடி உயரத்துக்கு அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுந்தன.

24 மணி நேரம் நீடிக்கும்

24 மணி நேரம் நீடிக்கும்

இந்த புயலின் தாக்கம் 24 மணி நேரங்களுக்கு நீடிக்கும்.

240 கி.மீ முதல் 300 கி.மீ வரை காற்று

240 கி.மீ முதல் 300 கி.மீ வரை காற்று

கரையை கடந்த போது மணிக்கு 240 முதல் 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கரமாக காற்று வீசியது.

சூப்பர் புயல்

சூப்பர் புயல்

கடந்த 1999-ம் ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி வங்க கடலில் உருவான சூப்பர் புயல் ஒடிஷாவை தாக்கிய போது மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மழையும் கொட்டித்தீர்த்தது. அந்த புயல் மற்றும் மழையின் காரணமாக ஒடிசாவில் பலத்த சேதம் ஏற்பட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

சக்தி வாய்ந்த பாய்லின்

சக்தி வாய்ந்த பாய்லின்

ஒடிஷாவை அப்போது தாக்கிய சூப்பர் புயல், மிகவும் சக்தி வாய்ந்த 5-வது வகை புயல் ஆகும். இப்போது தாக்க இருக்கும் பாய்லின் புயல் அதற்கு அடுத்த நிலையில் உள்ள சக்தி வாய்ந்த 4-வது வகை புயல் என்று லண்டனில் உள்ள புயல் ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. புயல் கரையை நெருங்குவதற்கு முன்பே ஒடிஷா, ஆந்திர மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன.

7 லட்சம் பேர் வெளியேற்றம்

7 லட்சம் பேர் வெளியேற்றம்

இரு மாநிலங்களிலும் மீட்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். ஒடிஷாவில் 7 மாவட்டங்களில் சுமார் 7 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+