இன்று முதல் வங்கிகளில் நோட்டு மாற்றும் உச்சவரம்பு ரூ.2000 மட்டுமே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வங்கிகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பு 4,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக இன்று முதல் குறைக்கப்படுகிறது.

அதேநேரம், விவசாயிகள், தங்கள் வங்கிகணக்கில் இருந்து, வாரத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய்,பெற்று கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ரபி பருவ பயிர்களை பயிரிட, சிரமம் இருக்கக் கூடாதென, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து வர்த்தகர்களும், இதே அளவு தொகையை பெற, ஏற்கனவே அனுமதிக்கப் பட்டு வருகின்றனர்.

Daily cash withdrawal limit reduced from Rs 4,500 to Rs 2000 starting from today

பல்வேறு பொருட்களை மண்டிகளில் வைத்து வர்த்தகம் செய்வோர், வாரத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, வங்கிக் கணக்கில் இருந்து பெற அனுமதிக்கப்படுவர். மத்திய அரசில், குரூப் சி பிரிவை சேர்ந்த ஊழியர்கள், சம்பளத்தில் முன் பணமாக, 10 ஆயிரம் ரூபாய் வரை பெறலாம். நவம்பர் மாத சம்பளத்தில், இந்த தொகை சரி செய்யப்படும்.

இத்தகவல்களை பொருளாதார விவகாரங்கள் செயலர் சக்தி காந்த தாஸ் டெல்லியில் நேற்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+