பிரதமர் சொந்த ஊரருகே பற்றி எரியும் சா”தீ”- தலித் சிறுவனுக்கு முடிவெட்ட மறுப்பு!
காந்திநகர்: குஜராத்தில் பிரதமர் மோடியின் சொந்த ஊர் அருகே 3 வயது தலித் சிறுவனுக்கு முடிவெட்ட மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தந்தை போலீசில் புகார்
பிரதமர் மோடியின் சொந்த ஊர் குஜராத் மாநிலம் வாத்நகர் ஆகும். இங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் கர்பாதியா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தை சேர்ந்த நரேஷ் பார்மர் என்பவர் தனது 3 வயது மகன் தீப்பை அதே ஊரில் உள்ள முடிதிருத்தம் செய்யும் கடைக்கு முடிவெட்ட அழைத்து சென்றார். சிறுவனையும், அவனது தந்தையையும் காத்திருக்குமாறு கடைக்காரர் கூறினார்.

இந்த நிலையில் கடைக்காரருக்கு ஒரு போன் வந்தது. அதில் அவர் பேசி முடித்ததும், 3 வயது தலித் சிறுவனுக்கு முடிவெட்ட முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் சிறுவனை முடிவெட்டாமல் தந்தை அழைத்துச் சென்று விட்டார்.
இந்த சம்பவம் பற்றி பின்னர் அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் தலித் சிறுவன் முடிவெட்ட வந்திருப்பதை தெரிந்து கொண்ட யாரோ மற்றொரு இனத்தைச் சேர்ந்தவர் முடிதிருத்துவோருக்கு போன் செய்து மிரட்டல் விடுத்ததும், இதைத்தொடர்ந்து அவர் மறுத்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications