கோயிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்.. ராஜஸ்தானில் பயங்கரம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கோயிலுக்குள் செல்ல முயற்சித்த தலித் சிறுவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.
பாலி மாவட்டத்தில் கோயிலுக்குள் செல்ல முயற்சி செய்ததாக ஒரு தலித் சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் சிறுவனின் கை, கால்களை கட்டிவிட்டு 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிய காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவம் கடந்த ஜூன் 1-ஆம் தேதி நடைபெற்றது. இந்த வீடியோ வெளியான பின்னர் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில் சிறுவன் கோயில் பூசாரியின் மகளிடம் தவறாக நடந்து கொண்டதால் அந்த சிறுவனை தாக்கியதாக 4 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸார் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தி சிறுவனை கைது செய்த போலீஸார் அவரை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். இரு குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications