பீகாரில் சூனியக்காரி என தலித் பெண் நிர்வாணம்... சிறுநீரை குடிக்க வைத்த கொடூரம்!
பீகார்: பீகார் மாநிலத்தில் தலித் பெண் ஒருவரை சூனியக்காரி எனகூறி அவரை நிர்வாணம் செய்து அவரது சிறுநீரை அவரை குடிக்கவைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் இந்த வெக்கக்கேடான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலித் இன மக்கள் மீதான சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பீகாரில் குறைந்ததாக தெரியவில்லை. இந்த சம்பவம் சாதிய ரீதியில் நடைபெறவில்லை என்றபோதிலும், மூட நம்பிக்கையில் திளைத்துள்ள பொதுமக்களின் அறியாமையால் நிகழ்ந்துள்ளது என கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் பிப்ரா கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கணவர் அஜய் பாஸ்வன் குஜராதில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், தலித் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த நபர்கள், அந்த பெண்ணை நிர்வாணப் படுத்தி, அந்த பெண்ணின் சிறுநீரை அவரையே வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இது குறித்து வெளியே கூறினால் கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த அப்பெண் கிராமத்தில் இருந்து வெளியேறி தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டாராம். இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: பிப்ரா கிராமத்தில் குழந்தைகள் சிலருக்கு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். குழந்தைகள் உடல்நலக் குறைவுக்கு சூனியம் வைத்துள்ளது தான் காரணம் அப்பகுதி மக்கள் நம்பியுள்ளனர். இதையடுத்து தலித் பெண் ஒருவரை சூனியக்காரி எனகூறி, 4 நபர்கள் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் சிறுநீரை, வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணையை குடிக்க வைத்துள்ளனர் என தெரிவிக்கப்பபட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஜூலை 16-ந் தேதி பீகார் மாநிலத்தில் நெகரா பகுதியில் உள்ள பைதான் கபாய் கிராமத்திலும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு தலித் பெண் மற்றும் அவரது மகள் நிர்வாணமாக்கப்பட்டு, சிறுநீரை குடிக்க வைக்கப்பட்டுள்ளனர். கூலித் தொழிலாளர்களான அவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் கமிஷன் தரவில்லை எனகூறி இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
A Dalit woman was allegedly beaten up and forced to drink her urine by four men after branding her as a "witch" at Pipra village in Bihar's Darbhanga district, police said.
பீகார் மாநிலத்தில் தலித் பெண் ஒருவரை சூனியக்காரி எனகூறி அவரை நிர்வாணம் செய்து அவரது சிறுநீரை அவரை குடிக்கவைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் பிப்ரா கிராமத்தில் குழந்தைகள் சிலருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. குழந்தைகள் உடல்நலக் குறைவுக்கு சூனியம் வைத்துள்ளது தான் காரணம் அப்பகுதி மக்கள் நம்பியுள்ளனர். இதையடுத்து தலித் பெண் ஒருவரை சூனியக்காரிஎனகூறி, 4 நபர்கள் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் சிறுநீரை, வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணையை குடிக்க வைத்துள்ளனர் என தெரிவிக்கப்பபட்டுள்ளது. இதுதொடர்பாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications