சசிதரூருக்கு சிக்கல்.... சுனந்தா புஸ்கர் மரணம் இயற்கையானது அல்ல- டெல்லி போலீஸ் கமிஷனர்
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானது அல்ல என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பாஷி கூறியுள்ளார். இதனால் சசிதரூர் கைது செய்யப்பட்டக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந் தேதி சசிதரூரின் 51 வயது மனைவி சுனந்தா புஷ்கர், டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெகர் தராருடன் சசி தரூருக்கு தொடர்பு இருந்தாகவும், இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சுனந்தா தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. போலோனியம் என்ற கதிரியக்க பொருளால் சுனந்தா கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.
சுனந்தா மரணம் தொடர்பாக சசி தரூரின் உதவியாளர் நாராயண் சிங், ஓட்டுநர்கள் பஞ்ரங்சி, சஞ்சய் தீவான் சசி தரூர் , சுனந்தாவின் இரு நண்பர்கள் மற்றும் சசி தரூர் உள்ளிட்ட 6 பேரிடம் ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு போலீஸ் கமிஷனர் பி.எஸ். பாஷி நேற்று அளித்த பேட்டி:
சசிதரூர் மனைவி சுனந்தாவின் மரணம் இயற்கையானது அல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் சுனந்தா புஷ்கர் விஷத்தால் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் என்ன விஷம் என்பதை அறிந்து கொள்ளும் வசதி இங்கு இல்லை.
இதனால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுனந்தாவின் உள்ளுறுப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் வாஷிங்டன் நகரில் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் இருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானது அல்ல . அதேவேளையில் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் தன்மையுடைய போலோனியம் என்ற கதிர்வீச்சு பொருள் அவரது உடல் உறுப்புகளில் இல்லை.
இவ்வாறு பாஷி கூறினார்.
இதனைத் தொடர்ந்து சசிதரூர் கைது செய்யப்படக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications