என் அப்பாதான் என் தோழியை பலாத்காரம் செய்தார்.. மகளின் புகாரால் தந்தை கைது!
டெல்லியில் தனது தந்தைதான் தனது தோழியை பலாத்காரம் செய்ததாக பெற்ற மகளே போலீஸில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: டெல்லியில் தனது தந்தைதான் தனது தோழியை பலாத்காரம் செய்ததாக பெற்ற மகளே போலீஸில் புகார் அளித்துள்ளார்.
டெல்லி குருகிராம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 18 வயதில் மகள் ஒருவர் உள்ளார். சட்டப்படிப்பு படித்து வரும் அவரும் அப்பகுதியை சேர்ந்த அதே வயதுடைய மற்றொரு பெண்ணும் தோழிகளாக உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிமை அந்த பெண் தனது தோழியை பார்க்க தொழிலதிபரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தோழியின் தாய் வெளியூர் சென்றிருந்ததால் இரவு தன்னுடனேயே தங்க வைத்துள்ளார் அந்த பெண்.
மதுக்குடித்த தந்தை
தாய் இல்லாததால் இரவு டின்னருக்காக அவரது தந்தை தனது மகளையும் அவரது தோழியையும் அங்குள்ள சைபர் ஹப்புக்கு அழைத்து சென்றார். அங்கு அளவுக்கு அதிகமாக மது குடித்த அந்த பெண்ணின் தந்தை, பின்னர் அவர்கள் 2 பேரையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
தோழியை எழுப்பிய தந்தை
பின்னர் அந்த பெண் தனது தோழியுடன் அவரது அறையிலேயே படுத்து தூங்கியுள்ளார். அதிகாலை 4 மணியளவில் அந்த பெண்ணின் தந்தை அவரது தோழியை எழுப்பியுள்ளார்.
பலாத்காரம் செய்த தந்தை
தனியாக பேச வேண்டும் வெளியில் வா என கூறி அழைத்து தனது அறைக்கு அந்த பெண்ணை கூட்டிச்சென்ற தொழிலதிபர் மகளின் தோழி என்றும் பாராமல் அவரை தனது படுக்கையில் தள்ளி பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் தன்னை விட்டு விடும் படி கதறியும் அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
போலீஸில் புகார்
இதையடுத்து தனது வீட்டிற்கு சென்ற அந்த பெண் தாயிடம் நடந்ததை கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் அவர்கள் புகார் அளித்தனர்.
தந்தை மீது மகளே புகார்
இந்நிலையில் தனது தந்தை குடிபோதையில் தனது தோழியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது மகளே போலீஸில் புகார் அளித்துள்ளார். மூன்று பேரின் புகாரை தொடர்ந்து அந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.