குஜராத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட இஷ்ரத் தீவிரவாதிதான்.. ஹெட்லி மீண்டும் திட்டவட்டம்
மும்பை: குஜராத் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட இளம் பெண் இஷ்ரத் ஜஹான் ஒரு தீவிரவாதி என்று தேசிய புலனாய்வு அமைப்பிடம் தான் கூறியிருந்ததாகவும், அதை ஏன் அவர்கள் பதிவு செய்யவில்லை என்று தெரியவில்லை என்றும் தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிக்கு, மும்பை தாக்குதலில் தொடர்புள்ளது தெரியவந்தது. இந்திய தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்த நிலையில், மும்பை நீதிமன்றத்திற்கு வீடியோகான்பரன்ஸ் மூலம் சாட்சியமளித்து வருகிறார் ஹெட்லி.

இன்று நான்காவது நாளாக நடைபெற்ற குறுக்கு விவாதத்தில், இஷ்ரத் ஜஹான் தனக்கு நேரடி பரிட்சையம் இல்லை என்றும், செய்தித்தாள் செய்திகள் மூலமாக அவர் பற்றி அறிந்ததாகவும் ஹெட்லி தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர், இஷ்ரத் ஜஹான் ஒரு தீவிரவாதி என்று என்.ஐ.ஏவிடம் வழங்கிய வாக்குமூலத்தில் நீங்கள் ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஹெட்லி, நான் என்.ஐ.ஏவிடம் இந்த தகவலை சொன்னேன். அவர்கள் எழுதியிருப்பார்கள் என்று நினைத்தேன். எழுதியதை அவர்கள் எனக்கு திரும்ப படித்தும் காட்டவில்லை. அவர்கள் ஏன் அதை எழுதவில்லை என்பதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.
மேலும், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத குழுவில் பெண்கள் தீவிரவாத பிரிவும் இருப்பதாகவும், அபு அய்மான் என்பவரின் தாய், இந்த தீவிரவாத குழுவிற்கு தலைவி எனவும் ஹெட்லி கூறியுள்ளார்.
குஜராத் முதல்வராக இருந்த மோடியை கொலை செய்யும் திட்டத்தோடு ஊடுருவிய இஷ்ரத் உள்ளிட்ட லஷ்கர் தீவிரவாதிகளை குஜராத் போலீசார் என்கவுண்டர் செய்தனர். ஆனால், வேண்டுமென்றே தனது மகளை கொலை செய்துவிட்டதாக இஷ்ரத் பெற்றோர், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் ஹெட்லியும், இஷ்ரத்தை தீவிரவாதி என திரும்பவும் கூறியுள்ளது, குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications