போலி மதுபானங்கள் விற்றால் மரண தண்டனை... அதிரடி சட்டத்தை கொண்டு வந்த பஞ்சாப்!
அமிர்தசரஸ்: பஞ்சாபில் போலி மதுபானங்கள் விற்றால் மரண தண்டனை என்ற அதிரடி சட்டத் திருத்தத்துக்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒருவர் விற்கும் போலி மதுபானங்களால் உயிரிழப்பு ஏற்பட்டால் அதனை விற்றவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். 20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
கடந்த ஆண்டு பஞ்சாபின் டார்ன் தரன், அமிர்தசரஸ் மற்றும் குர்தாஸ்பூர் மாவட்டங்களில் போலி மதுபானம் அருந்திய 80-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

80-க்கும் மேற்பட்டோர் பலி
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் போலி மதுபானங்கள் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக போலீசார் கண்காணித்து ஒரு பகுதியில் நடவடிக்கை எடுத்தாலும் வேறு ஒரு பகுதியில் போலி மதுபானங்கள் விற்பனையை மர்ம நபர்கள் அரங்கேற்றி தொடங்கி விட்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் டார்ன் தரன், அமிர்தசரஸ் மற்றும் குர்தாஸ்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் போலி மதுபானம் அருந்திய 80-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மரண தண்டனை
இதனை தொடர்ந்து மாநிலத்தில் உலா வரும் போலி மதுபானங்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இந்த நிலையில் பஞ்சாபில் இனி போலி மதுபானங்கள் விற்றால் மரண தண்டனை என்ற அதிரடி சட்டத் திருத்தத்துக்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக பிரிவு 61 ஏ மற்றும் பிரிவு 61 மற்றும் பிரிவு 63 இன் திருத்த மசோதாவை தற்போதைய பட்ஜெட் அமர்வில் அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அதிரடி தடை
இந்த திருத்தபட்ட சட்டத்தின்படி பஞ்சாபில் போலி மதுபானங்களை உற்பத்தி செய்யவதற்கும், விற்பதற்கும் தடை விதிக்கிறது. ஒருவர் விற்கும் போலி மதுபானங்களால் உயிரிழப்பு ஏற்பட்டால் அதனை விற்றவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். 20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். போலி மதுபானங்களால் கடுமையான காயம் ஏற்பட்டால் அதனை விற்கும் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை முதல் குறைந்தது ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதம் ரூ .10 லட்சம் வரை விதிக்கப்படும்.

கடுமையான சட்டம்
போலி மதுபானம் அருந்தும் ஒரு நபருக்கு வேறு ஏதேனும் காயம் ஏற்பட்டால், குற்றவாளிக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும் போலி மதுபானம் அருந்துபவருக்கு காயம் ஏற்படாவிட்டால், குற்றவாளிக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், இரண்டு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications