போலி மதுபானங்கள் விற்றால் மரண தண்டனை... அதிரடி சட்டத்தை கொண்டு வந்த பஞ்சாப்!
அமிர்தசரஸ்: பஞ்சாபில் போலி மதுபானங்கள் விற்றால் மரண தண்டனை என்ற அதிரடி சட்டத் திருத்தத்துக்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒருவர் விற்கும் போலி மதுபானங்களால் உயிரிழப்பு ஏற்பட்டால் அதனை விற்றவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். 20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
கடந்த ஆண்டு பஞ்சாபின் டார்ன் தரன், அமிர்தசரஸ் மற்றும் குர்தாஸ்பூர் மாவட்டங்களில் போலி மதுபானம் அருந்திய 80-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

80-க்கும் மேற்பட்டோர் பலி
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் போலி மதுபானங்கள் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக போலீசார் கண்காணித்து ஒரு பகுதியில் நடவடிக்கை எடுத்தாலும் வேறு ஒரு பகுதியில் போலி மதுபானங்கள் விற்பனையை மர்ம நபர்கள் அரங்கேற்றி தொடங்கி விட்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் டார்ன் தரன், அமிர்தசரஸ் மற்றும் குர்தாஸ்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் போலி மதுபானம் அருந்திய 80-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மரண தண்டனை
இதனை தொடர்ந்து மாநிலத்தில் உலா வரும் போலி மதுபானங்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இந்த நிலையில் பஞ்சாபில் இனி போலி மதுபானங்கள் விற்றால் மரண தண்டனை என்ற அதிரடி சட்டத் திருத்தத்துக்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக பிரிவு 61 ஏ மற்றும் பிரிவு 61 மற்றும் பிரிவு 63 இன் திருத்த மசோதாவை தற்போதைய பட்ஜெட் அமர்வில் அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அதிரடி தடை
இந்த திருத்தபட்ட சட்டத்தின்படி பஞ்சாபில் போலி மதுபானங்களை உற்பத்தி செய்யவதற்கும், விற்பதற்கும் தடை விதிக்கிறது. ஒருவர் விற்கும் போலி மதுபானங்களால் உயிரிழப்பு ஏற்பட்டால் அதனை விற்றவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். 20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். போலி மதுபானங்களால் கடுமையான காயம் ஏற்பட்டால் அதனை விற்கும் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை முதல் குறைந்தது ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதம் ரூ .10 லட்சம் வரை விதிக்கப்படும்.

கடுமையான சட்டம்
போலி மதுபானம் அருந்தும் ஒரு நபருக்கு வேறு ஏதேனும் காயம் ஏற்பட்டால், குற்றவாளிக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும் போலி மதுபானம் அருந்துபவருக்கு காயம் ஏற்படாவிட்டால், குற்றவாளிக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், இரண்டு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications