உ.பி கார்மெண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. 13 பேர் பரிதாப பலி! #Sahibabad
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாகிபாபாத் பகுதியில் நடந்த தீ விபத்தில் சிக்கி சுமார் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தின் சாகிபாபாத் பகுதியில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, இந்த விபத்தில் சிக்கி சுமார் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications