மஸ்ரத் ஆலமை விடுதலை செய்ய ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில்தான் உத்தரவிடப்பட்டதா? புது சர்ச்சை
டெல்லி: காஷ்மீர் பிரிவினைவாதி மஸ்ரத் ஆலமை சிறையில் இருந்து விடுதலை செய்ய ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில்தான் உத்தரவிடப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே காஷ்மீர் மாநில உள்துறை, ஜம்மு மாவட்ட ஆட்சியருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 4-ந் தேதி எழுதியதாக கூறப்படும் கடிதம் நேற்று முன்தினம் இரவு திடீரென வெளியானது.

அதில் மஸ்ரத் ஆலமை விடுதலை செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே மஸ்ரத் ஆலமை விடுதலை செய்ய ஜனாதிபதி ஆட்சிக் காலத்திலேயே உத்தரவிடப்பட்டதாக கருதப்படுகிறது. ஆனால், அதுபற்றி ஆளுநருக்கு எதுவுமே தெரியாது.
மேலும் இக் கடிதத்தை எழுதியதாக கூறப்படும் காஷ்மீர் உள்துறை கூடுதல் செயலாளர் சுதர்ஷன் குமார் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் இக் கடிதம் பற்றி எதுவும் குறிப்பிடாததும், சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
பிப்ரவரி 4-ந் தேதி எழுதிய கடிதமாக இருந்தால், அது மார்ச் 7-ந் தேதி தான் ஆட்சியருக்கு போய்ச் சேர்ந்தது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது. இருப்பினும், அந்த கடிதம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications