ஜம்முவில் தீவிரவாதிகளை துவம்சம் செய்ய களம் இறங்கும் 544 "எந்திரன்கள்"!
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட 544 ரோபோக்களை பயன்படுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக ரோபோக்களை பயன்படுத்தத இந்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவல்கள் காரணமாக அவ்வபோது எல்லைப்படையினர் தீவிரவாதிகளிடையேயான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களில் நாட்டிற்காக போராடி ராணுவ வீரர்கள் உயிரிழப்பதும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் ஜம்மு பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பயன்படுத்தி சண்டையிடுவதன் அடுத்தகட்டமாக ரோபோக்களை பயன்படுத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட 544 ரோபக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்திய எல்லை பாதுகாப்பு
எதிரிகளைக் கையாளும் வகையில் பிரத்யேகமாகவடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் வெவ்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் வெடிபொருட்களை எளிதில் கண்டுபிடித்துவிடும். இந்திய எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கோரிக்கையை ராணுவம் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு அளித்துள்ளது.

ரோபோக்கள் தாக்குதல்
தீவிரவாதிகள் அடர்ந்த காட்டு பகுதிகளில் மறைந்து வந்து தாக்குதல்களை நடத்துகின்றனர், அந்த சமயங்களில் பள்ளத்தாக்குகளில் இருந்து வந்து ரோபோக்கள் தாக்குதல் நடத்தும் என்று கூறப்படுகிறது.

தீவிரவாதிகள் நடமாட்டம்
ஆயுத சண்டை மற்றும் வெடிபொருட்களை கையாள்வதோடு ரோபோக்கள் கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல்களை சேகரிக்கும்.

இந்திய ரோபோக்கள்
200 மீட்டர் தூரம் வரையுள்ள தகவல்களை சேகரிக்கும் திறன் படைத்தவைகளாக இந்த ரோபோக்கள் கேமராக்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன்கள் பொருத்தப்பட்டவையாக இருக்கும். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ரோபோக்கள் மட்டுமே பாதுகாப்புத் துறையின் கொள்முதல் விதிகள் 2016க்கு உட்பட்டு இவை கொள்முதல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications