Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில் சிக்னல் குறைபாடுகள்.. 3 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை?.. அலட்சியமா.. வெளியான ஷாக் தகவல்!

Subscribe to Oneindia Tamil

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்துக்கு தொழில் நுட்ப கோளாறு காரணமா? அல்லது மனித தவறுகள் கரணமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பே தென்மேற்கு ரயில்வே தலைமை செயல்பாட்டு மேலாளர் இந்திய ரயில்வேக்கு சிக்னல் அமைப்பில் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநககர் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று முன் தினம்( வெள்ளிக்கிழமை) வழக்கம் போல் ஷாலிமாரில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது பயங்கர விபத்தில் சிக்கியது.

Deficiency in railway signal system: Railway official who wrote letter 3 months back?- railway sources

பெங்களூரில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 இந்த விபத்தில் சிக்கிக் கொண்டன. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த போது ரயில்கள் விபத்தில் சிக்கியதால் ரயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதி சின்னாபின்னமாகின. ஒன்றன் மீது ஒன்று ஏறி பெட்டிகள் உருக்குலைந்து கிடந்தது. விபத்தில் சிக்கிய 3 ரயில்களில் 2 ரயில்கள் பயணிகள் ரயில் என்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு அலறினர்.

இந்த கோர விபத்தில் விபத்தில், இதுவரை மொத்தம் 288 பயணிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 803 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. எனினும், அனைவரும் குணம் அடைந்து நலம் பெற வேண்டும் என்பதே நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது.

நாட்டையே உலுக்கியுள்ள ஒடிசா ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறு காரணமா அல்லது மனித தவறுகளா? என்று பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன. இதனிடையே, ரயில் சிக்னல் அமைப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தென்கிழக்கு பிராந்திய சிக்னல் அமைப்பில் கடுமையான குறைபாடு உள்ளதாக எச்சரிக்கை தெரிவித்து இந்திய ரயில்வேக்கு தென்மேற்கு தலைமை செயல்பாட்டு மேலாளர் கடிதம் எழுதியிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கர்நாடகா ஹேசதுர்கா ரயில் நிலையத்தில் பிப்ரவரி 8 ஆம் தேதி இரு ரயில்கள் மோதும் நிலைக்கு சென்றதாகவும் சிக்னல் கோளாறு காரணமாக இரு ரயில்கள் மோதும் நிலை லோகோ பைலட் சாதுர்யத்தால் தவிர்க்கப்பட்டதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, பிப்ரவரி 8 ஆம் தேதி சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் ஒன்றுடன்மோதும் நிலைக்கு சென்றதாகவும் இதை சுட்டிக்காட்டி தென்மேற்கு ரயில்வே தலைமை செயல்பாட்டு மேலாளர் இந்திய ரயில்வேக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சிக்னல் கோளாறு காரணமாக ஒடிசா ரயில் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று விவாதங்கள் கிளம்பும் நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு செல்லும் இந்த வழித்தடத்தில் 20 க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழித்தடத்தில் சிக்னல் குறைபாடு இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே கடிதம் எழுதப்பட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+