டெல்லியில் ஓடும் காரில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள்
டெல்லி: தெற்கு டெல்லியில் 17 வயது சிறுமி ஓடும் காரில் 3 வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
தெற்கு டெல்லியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனக்கு பழக்கமான ரோஹித், டிங்கு மற்றும் நரேந்தர் ஆகிய 3 வாலிபர்களுடன் சப்தர்ஜங் என்கிளேவ் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்கு காரில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த 3 வாலிபர்கள் சிறுமியை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதையடுத்து இரவு 10 மணிக்கு சிறுமி காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த கொடுமை பற்றி புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் பிஸியோதெரபி மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பிறகு தலைநகரில் பல பலாத்கார சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications