டெல்லி தேர்தல்: பாஜக வேட்பாளர் காரில் இருந்து 2000 மது பாட்டில்கள் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் சட்டசபை தேர்தல் இன்று நடந்தது.

மங்கல்புரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுர்ஜித் குமாரின் காரில் இருந்து 2000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Delhi assembly election 2015 – begins…

இந்நிலையில் இத்தேர்தலில் ஓட்டுகளைப் பதிவு செய்து தங்களுடைய ஆதரவினை அளிக்குமாறு டெல்லி வாழ் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் டெல்லியில் களத்தில் இருக்கும் பல்வேறு கட்சித் தலைவர்கள்.

டெல்லியில் மும்முனை போட்டியாக ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் களத்தில் போட்டியிடுகின்றன.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்தியப் பிரதமருமான நரேந்திர மோடி இளம் வாக்களர்களும் முன்வந்து தங்களுடைய ஓட்டுகளைப் பதிவு செய்து புதிய சாதனையை தேர்தல் வரலாற்றில் படைத்துக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

ஆம் ஆத்மிக் கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வந்து தங்களுடைய ஓட்டுகளை தவறாமல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தன்னுடைய வாக்குகளை பிரசிடெண்ட் எஸ்டேட்டில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையத்தில் பதிவு செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+