டெல்லியில் தூங்கி வழிந்து காரை ஓட்டி 3 பெண்களை கொன்ற சப்-இன்ஸ்பெக்டர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தென்கிழக்கு டெல்லியில் உள்ள பதர்பூர் பகுதியில் இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூங்கி வழிந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் ஏறி 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

டெல்லி காவல் துறை கட்டுபாட்டு அறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ரிஷி பால்(59). அவருக்கு திங்கிட்கிழமை இரவு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இரவு பணி முடிந்து ரிஷி நேற்று காலை தனது காரில் வீட்டுக்கு சென்றுள்ளார். மெஹ்ராலி-பதர்பூர் சாலையில் செல்கையில் அவர் தூங்கிவிட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

Delhi cop allegedly dozes off while driving, crushes 3 women to death

கார் சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்த துப்புரவு பணியாளர்கள் 3 பேர் மீது மோதியது. இதில் சகுந்தலா(55), மீரா(50) மற்றும் மாயா(28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரிஷியை கைது செய்துள்ளனர்.

டெல்லியில் லஞ்சம் தர மறுத்த பெண்ணை செங்கல்லால் போலீஸ்காரர் ஒருவர் தாக்கிய சம்பவம் நடந்த கையோடு சப்-இன்ஸ்பெக்டர் காரை ஏற்றி 3 பெண்களை கொன்றுள்ளார்.

ரிஷியின் கார் வேகமாக வந்து அந்த பெண்கள் மீது மோதியாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+