கெஜ்ரிவாலின் பதவியேற்பு நிகழ்ச்சி: ஆம் ஆத்மிக்காக கோஷமிட்ட கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்
டெல்லி: ராம்லீலா மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக கோஷமிட்ட காரணத்திற்காக சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பிற்கு போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர்.

அப்போது, ராஜேஷ்குமார் என்ற கான்ஸ்டபிளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். திடீரென கெஜ்ரிவால் பதவியேற்ற போது, தனது தொப்பியைக் கழற்றி வீசி விட்டு, பாதுகாப்பு தடுப்பின் மீது ஏறி, ஆம் ஆத்மியின் சுலோகன்களைக் கத்தியுள்ளார் ராஜேஷ்.
உடனடியாக மற்ற போலீஸாரால் அங்கிருந்து அகற்றப் பட்ட ராஜேஷ், தற்போது சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ராஜேஷ்குமார் தனது தனிப்பட்ட கருத்துக்களை பணியில் இருந்தபோது வெளிக்காட்டியது தவறு' என விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications