‘பெண் கருவை கலைக்க மாட்டோம்’... 4 டெல்லி புதுமண தம்பதிகள் உறுதிமொழி!
டெல்லி: டெல்லி மாநில அரசின் வருவாய்த்துறை அறிவிப்பினையடுத்து இதுவரை நான்கு புதுமணத் தம்பதிகள் பெண் கருவைக் கலைக்க மாட்டோம் என உறுதி எடுத்துள்ளனர்.
கடந்த 9ம் தேதி டெல்லி மாநில அரசின் வருவாய்த்துறை, ‘‘பெண் கருவை கலைக்க மாட்டோம், பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போல பாதுகாத்து வளர்ப்போம் என்று புதுமணத் தம்பதிகள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்'' என அறிவித்தது.
இந்த அறிவிப்பின் படி, இதுவரை 4 புதுமணத் தம்பதிகள் இந்த உறுதி மொழியை எடுத்துள்ளனதாக தெரிய வந்துள்ளது. வருவாய்த் துறை அதிகாரி முன்னிலையில் திருமணத்தை பதிவு செய்துகொண்ட போது இத்தம்பதிகள் இந்த உறுதி மொழியை எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரி சோம் நாயுடு கூறுகையில், ‘பெண் கருக்கலைப்பை தடுப்பதற்காகவும், வயிற்றில் இருக்கும் கரு ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் அறிவது சட்டவிரோதமானது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தான் எங்கள் நோக்கம்' எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியும் தனது சுதந்திர தின உரையில் இது தொடர்பாக வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications