டெல்லியில் வரலாறு காணாத பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி ஆட்சி!: பா.ஜ.க, காங். படுதோல்வி!!
டெல்லி: டெல்லி மாநிலத்தில் மாபெரும் பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. கருத்து கணிப்புகளைத் தாண்டி 67 தொகுதிகளில் ஆம் ஆத்மி வென்றுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளள எண்ணும் பணி இன்று காலை 8 மணி தொடங்கியது. முதல் அரை மணி நேரத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளிடையே கடும் போட்டி இருப்பதாக தோற்றம் இருந்தது.

ஆனால் போகப் போக ஆம் ஆத்மி அதிரடியாக தனிப்பெரும்பான்மையையும் தாண்டி மாபெரும் வெற்றியாக மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் முன்னிலை வகித்து அத்தனன தொகுதிகளளயும் கைப்பற்றியது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முந்தைய தேர்தலை ஒப்பிடுகையில் படுதோல்வியை சந்தித்துவிட்டன.
டெல்லியில் கடந்த 2013 இறுதியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் 28 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி 8 இடங்களை பிடித்த காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. அதே நேரத்தில் பாரதிய ஜனதாவோ 31 தொகுதிகளைக் கைப்பற்றி முதன்மை கட்சியாக இருந்தது.
ஆனால் ஜன்லோக்பால் மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்ய முடியாமல் போனதற்காக முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் விலகினார். மொத்தம் 49 நாட்கள் மட்டுமே அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சி செலுத்தினார்.
இதன் பின்னர் டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அத்துடன் புதிய அரசு அமைவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில் சட்டசபை கலைக்கப்பட்டு கடந்த 7-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
இம்முறை ஆட்சியை பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆம் ஆத்மி கட்சியினர் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினர். மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து டெல்லியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பாரதிய ஜனதாவும் தீவிரம் காட்டியது.
இருப்பினும் தொடர்ந்து வந்த கருத்து கணிப்புகள் பலவும் இம்முறை ஆம் ஆத்மி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்தன. இந்த கருத்துக் கணிப்புகள் முடிவின் படியே தற்போது தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன.
இன்று காலை வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்தது. அதன் பின்னர் பாரதிய ஜனதா கடும் போட்டியை உருவாக்கும் நிலை உருவானது.
ஆனால் ஒரு மணிநேரத்தில் நிலைமை தலைமைகீழானது. கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலில் 31 தொகுதிகளைக் கைப்பற்றி முதல் கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி வெறும் 3 தொகுதிகளில்தான் முன்னிலை வகித்தது.
அதே நேரத்தில் 2013-ல் 28 தொகுதிகளைக் கைப்பற்றி கூட்டணி ஆட்சி அமைத்த ஆம் ஆத்மியோ தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 36 தொகுதிகளைத் தாண்டி மாபெரும் பெரும்பான்மையாக 67 தொகுதிகள் வரை முன்னிலை வகித்தது
கடந்த 2013-ல் 8 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சியோ இம்முறை கருத்துக் கணிப்புகள் கூறியபடியும் கூட ஒரு தொகுதியிலும் கூட வெல்ல முடியாமல் போனது. காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அஜய்மக்கான் படுமோசமான தோல்வியை சதார் பஜார் தொகுதியில் எதிர்கொண்டார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் அக்கட்சியின் 140 எம்.பிக்கள் என பெருமளவிலான பிரசாரத்தை பாரதிய ஜனதா செய்து பார்த்தும் அக்கட்சியால் கடந்த முறை வென்ற தொகுதிகளைக் கூட கைப்பற்ற முடியாத படுதோல்வியே ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்களில் வெற்றி வாகை சூடிய பாரதிய ஜனதா கட்சியால் தலைநகர் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் மட்டுமல்ல 3 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருப்பது அக்கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது.
அதேநேரத்தில் எந்த ஒரு இடத்தையும் பெறாத காங்கிரஸ் கட்சிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியபடி, மிகப் பெரிய பேரழிவாகத்தான் இத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. மக்களின் பெருநம்பிக்கையைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் கூடிய ஆட்சியை ஆம் ஆத்மி பெற்றிருப்பது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
15 ஆண்டுகாலம் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது டெல்லி மாநிலம். இங்கே பாரதிய ஜனதாவும் வேரூன்ற முயற்சித்தது. ஆனால் இந்த இரு பிரதான தேசிய கட்சிகளை தேர்ந்தெடுக்காமல் ஊழலை ஒழிப்போம் என்ற ஆம் ஆத்மியை டெல்லி வாக்காளர்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இதனால் இதுநாள் வரை ஆம் ஆத்மி மேற்கொண்டு வந்த ஊழல் எதிர்ப்பு முழக்கங்களை டெல்லியில் முழு வீச்சில் செயல்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா? -
சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி -
திமுக ஆதரவாளர்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற ராகுல் முடிவு? புதிய தலை யார்? -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் கேம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ அப்டேட்.. நோட் பண்ணுங்க -
"எவ்வளவு செலவானாலும் ஓகே.." கோடிகளை கொட்டும் அல்ட்ரா செல்வந்தர்கள்! இதுதான் துபாய் எஸ்கேப் பிளான் -
Lunar Eclipse: ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்.. கண்டுகளித்த மக்கள்.. என்னவெல்லாம் செய்யக்கூடாது -
Rajya sabha: மாநிலங்களவை தேர்தல்! திமுக வேட்பாளர்கள் யார் யார்? -
வீடு கொடுத்தவனுக்கே ஆபத்து.. ஏமாற்றப்பட்டதா அரபு நாடுகள்? அமெரிக்கா மீது கொதிக்கும் 'ஷேக்குகள்'! -
ஆபரேஷன் 200.. காங்கிரஸ் ‘பிக் பிளானை’ கண்டுபிடித்த ஸ்டாலின்.. முளையிலேயே கிள்ளிய அறிவாலயம்! -
ஓபிஎஸ் வந்து.. 1 வாரம் கூட ஆகலியே.. அதற்குள் அதிரும் அறிவாலய கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை! -
ஹார்முஸ் நீரிணை உலகத்தின் இதயம்.. இந்தியா டூ அமெரிக்காவை ஆடிப்போக வைத்த ஈரான் செயல் -
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லிக்கு தந்த ட்விஸ்ட்.. ராகுல் காந்தி ப சிதம்பரத்தை அனுப்பியது ஏன்?












Click it and Unblock the Notifications