டெல்லி தேர்தல்: யமுனை நதியில் நச்சு- கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக, காங்கிரஸ்! தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின், யமுனை நதியில் ஹரியானா பாஜக அரசு நச்சை கலந்துவிடுவதாக முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கை கோர்த்துள்ளன. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் யமுனை நதியில் நச்சு கலப்பது தொடர்பான விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் பேசியது என்ன?
டெல்லி தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், யமுனை நதியில் ஹரியானாவில் ஆளும் பாஜக அரசுதான் நச்சை கலந்து மாசடைய வைத்துள்ளது என குற்றம்சாட்டினார்.
தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த புகாரை தேர்தல் பிரசார ஆயுதமாக பாஜக கையிலெடுத்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் செய்துள்ளது. டெல்லியில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், யமுனை நதியில் நச்சை ஹரியானா பாஜக அரசு கலந்துவிட்டது என்பதற்கு என்ன ஆதாராத்தை தருவார் அரவிந்த் கெஜ்ரிவால் என கேள்வி எழுப்பி இருந்தார்.
பாஜகவுக்கு காங்கிரஸ் ஆதரவு
அரவிந்த் கெஜ்ரிவாலின், யமுனை நதியில் ஹரியானா பாஜக அரசு நச்சை கலந்துவிட்டது என்பது தொடர்பான பேச்சு விவகாரத்தில் பாஜகவை போல ஆதாரங்களை கேட்கிறது காங்கிரஸ். டெல்லியில் தேர்தல் பிரசாரம் செய்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, யமுனை நதி விவகாரத்தில் கெஜ்ரிவால் உரிய ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றார்.
கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணயம் நோட்டீஸ்
இதனிடையே, இரண்டு மாநிலங்களுக்கு இடையே பகைமையை உருவாக்கும் பேசிய பேச்சு தேர்தல் நடத்தை விதிமீறலாகும். இது தொடர்பான உரிய ஆதாரங்களை அரவிந்த் கெஜ்ரிவால் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது
தேர்தல் ஆணையத்தில் ஆம் ஆத்மி
இந்த பின்னணியில் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி முதல்வர் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி குழு இன்று சென்றது. அரவிந்த் கெஜ்ரிவாலின் யமுனை நதி குறித்த பேச்சுக்கு ஆம் ஆத்மி சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளதாக முதல்வர் அதிஷி தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications