டெல்லி பலாத்கார வழக்கு - மேலும் 2 குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு
டெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் மருத்துவ மாணவியை மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது ஆறு பேர் கொண்ட கும்பல். இதில் ஒருவர் இளம் சிறார் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மற்ற ஐந்து பேர் மீதும் தனி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் ராம்சிங் என்பவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

மற்ற நான்கு பேரான முகேஷ், வினய் சர்மா, பவன், அக்ஷய் தாக்கூர் ஆகியோருக்கு தனி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து நான்கு பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினர். ஆனால் அவர்களின் அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து நான்கு பேரும் உச்சநீதிமன்றத்தை அணுகினர். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் நான்கு பேரில் இருவரின் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மேலும் இருவரின் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி 23 வயதான நிர்பயா என்ற புனை பெயர் கொண்ட அந்தப் பெண் மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டார். அவரை கொடூரமாக பலாத்காரம் செய்த அக்கும்பல் இரும்பு கம்பியாலும் கொடூரமாக தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் உயிருக்குப் போராடி வந்த அவர் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 13 நாள் அவரது உயிர்ப் போராட்டம் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications