டெல்லி மெட்ரோ: ரயில் கதவை திறந்து வைத்து இயக்கிய ஓட்டுநர் இடைநீக்கம்!
டெல்லி: தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்ட மெட்ரோ ரயிலில் ஓடும்போது கதவுகள் திறந்து இருந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியில் இருந்து காலையில் புறப்பட்ட மெட்ரோ ரயிலில் அடுத்த நிறுத்தம் வரையில் கதவுகள் திறந்த நிலையிலேயே இருந்தன.
எப்போதும் வினாடிக்குள் திறந்து மூடிக்கொள்ள வேண்டிய கதவுகள் கிட்டதட்ட 25 நிமிடங்களுக்கு திறந்தவண்ணம் இருந்துள்ளன. காலை 9.30 மணியளவில் அர்ஜன்கார்க் முதல் கிதோர்னி ஸ்டேஷன் வரையில் பயணிக்கும் அந்த மெட்ரோ ரயிலின் கதவுகள் திறந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் ஜஹான்கீர்புரியில் ரயில் நின்று கிளம்பியபொழுது நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி டெல்லி மெட்ரோ ரயில் ஆய்வாளர்கள் தெரிவித்த போது, "ரயிலை இயக்கியவரால்தான் இந்த தவறு நிகழ்ந்துள்ளது. உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளனர்.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீபோல் பரவியுள்ளது. டுவிட்டரில் இதுபற்றி, "டெல்லி மெட்ரோ, மும்பை லோக்கல் ரயில் போல மாற விரும்புகின்றது" என்று கூறியுள்ளனர்.
மற்றொருவரோ, "ஆப்பிள் கம்பெனி விரைவில் "ஸ்லைடு டு லாக்" வசதியை மெட்ரோ ரயில் கதவுகளுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்" என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த ரயிலில் ஒரு நாளைக்கு 23 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications