தூயக் காற்றை சுவாசிப்பது பிறப்புரிமை.. போர் கொடி தூக்கிய டெல்லி மக்கள்
சிறுவர்கள், சிறுமியர், பெரியவர்கள் என டெல்லிவாசிகள், காற்றின் மாசைக் கட்டுப்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி: டெல்லியில் அதிக அளவிற்கு காற்று ஏற்கனவே மாசடைந்துள்ள நிலையில், தீபாவளியின் போது வெடிக்கப்பட்ட பட்டாசால் எழுந்த புகை மிக மோசமான வகையில் டெல்லியை பாதித்துள்ளது. இதனால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தக் கோரி டெல்லிவாசிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான அளவில் பனிப்புகை மூட்டம் நிலவி வருகிறது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு அடைந்துள்ளதால் பனிப்புகை அதிகம்.

ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் குழந்தைகள் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் டெல்லி அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மோசமான பனிப்புகை காரணமாக தெற்கு டெல்லி, வடக்கு டெல்லி, கிழக்கு டெல்லி ஆகிய 3 மாநகராட்சிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் சுமார் 10 லட்சம் மாணவர்கள் படிக்கும் 1700 பள்ளிகள் மூடப்பட்டன.
இந்நிலையில், சிறுவர்கள், சிறுமியர்கள், பெரியவர் என டெல்லியில் வசிக்கும் அனைவரும் காற்றில் ஏற்பட்டுள்ள மாசைக் கட்டுப்படுத்தக் கோரி டெல்லியில் உள்ள ஜன்தர் மன்தரில் ஒன்று ஊடி, அங்கிருந்து ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின் போது சுத்தமான காற்றை சுவாசிப்பது தங்கள் உரிமை என்றும், அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முழங்களை எழுப்பினார்கள்.
இதுகுறித்து போராட்டக்காரர்கள், ஒவ்வொரு ஞாயிறும் காற்றில் ஏற்பட்டுள்ள மாசைக் கட்டுப்படுத்தக் கோரி, போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்கள்.
முன்னதாக, காற்றின் மாசைக் கட்டுப்படுத்த டீசல் வாகனங்கள் டெல்லி நகரத்திற்குள் நுழையக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது. மேலும், ஒன்றைப்படை எண் கொண்ட கார்கள் ஒரு நாளும், இரட்டைப்படை எண் கொண்ட கார்கள் ஒரு நாளும் நகரத்திற்குள் இயங்கவும் டெல்லியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும், டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசைக் கட்டுப்படுத்த முடியாமல், மேலும், மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் டெல்லி அரசும் திணறி வருகிறது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications