திருட்டு நடந்தால் 'ஆன்லைனில்' புகார் தரலாம்- டெல்லி போலீஸ் புது திட்டம்
டெல்லி: இனி வீட்டில் திருட்டு போய்விட்டால் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்த்தான் புகார் தர வேண்டும் என்பதில்லை. மாறாக ஆன்லைன் மூலமாகவே புகார் அளிக்கலாம் என டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது.
ஆன்லைன் மூலமாகவே திருட்டு புகார் அளிக்க வசதியாக புது வலைத்தளம் நிறுவப்படும் எனவும்,அதன் மூலம் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் பற்றிய புகார்களை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால்,வீட்டில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்துவிட்டால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் போலீசாருக்கு புகார் தெரிவிக்கலாம்.
டெல்லி போலீஸ் இத்தகைய ஆன்லைன் புகார் வசதியை நாளை முதல் நடைமுறையில் கொண்டுவருகிறது.
இத்திட்டம் வெற்றி அடைந்தால் மற்ற வகையான குற்றங்களுக்கும்,மற்ற பகுதிகளுக்கும் இது விரிவாக்கப்படலாம்.இதன் மூலம் உடனடி புகார் அளிப்பது சுலபமாக்கப்படும் எனவும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications