1984 சீக்கியர் படுகொலை- காவல்துறையை முடக்கி வைத்த காங்கிரஸ் அரசு: "கோப்ராபோஸ்ட்" திடுக் தகவல்
டெல்லி: 1984 ம் ஆண்டு சீக்கியர்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட போது காவல்துறையை அப்போதைய காங்கிரஸ் அரசு முடக்கி வைத்ததாக 'கோப்ராபோஸ்ட்' இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.
கடந்த 1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்டதற்கு பின்னர் வெடித்த கலவரத்தின்போது காவல்துறையினரிடம் அரசு விதித்த கட்டளைகள் தொடர்பான ஆதாரங்களைக் கொண்டு கோப்ராபோஸ்ட் புலனாய்வுச் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், கலவரம் வெடித்தச் சூழலில், கலவரத்தை தடுக்க முதற்கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று தலைமை காவல்துறை அதிகாரி கவுதம் கவுலிடம் எஸ்.சி டான்டன் பேசிய உரையாடல் பதிவு இடம்பெற்றுள்ளது.
காங்கிரஸ் அரசு
கலவரத்தைக் கடுப்படுத்த வேண்டாம் என்று காவல்துறையிடம் அப்போதைய அரசு அறிவுறுத்தியது.
சீக்கியர்கள் மீதான தாக்குதல்
கலவரத்தில் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க வேண்டும் என்று கூறியவர்களுடைய குரல் முற்றிலும் ஒடுக்கப்பட்டது.
கலவரக்காரர்களுக்கு ஆதரவு
மேலும், 'இந்திரா காந்தி ஜிந்தாபாத்' என்ற கோஷத்துடன் கலவரத்தில் ஈடுபடுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தகவல் வந்ததாகவும், காவல்துறையினர் இதனையே பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிநீக்க எச்சரிக்கை
அத்துடன், இந்தக் கட்டளைகளை மீறினால் தாங்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுவிடுவோம் அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தால், கலவரத்தைத் தடுக்க காவல்துறை அதிகாரிகள் முனைப்பு காட்டவில்லை.
சீக்கியர்களுக்கு பாடம்
காவல்துறையினர் அனைவரும் சீக்கியர்களுக்கு தக்கப் பாடம் கற்றுத் தர வேண்டும் என்ற அப்போதைய காங்கிரஸ் அரசின் அறிவுறுத்தலுக்கு பணிந்து நடந்துகொண்டது உரையாடலின் மூலம் புலப்படுவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
காவல்துறையினர் பேட்டி
சீக்கியக் கலவரத்தின்போது பணியில் இருந்த காவல்துறையினரிடம் நடத்திய நேர்காணலை அடிப்படையாக வைத்து இந்தப் புலனாய்வுச் செய்தியை கோப்ராபோஸ்ட் வெளியிட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications