2ஜி வழக்கில் தீர்ப்பு: டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் வெளியேற்றம்!
2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து சென்ற திமுக தொண்டர்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து சென்ற திமுக தொண்டர்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பேரலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோர்ட் வளாகத்தில் நீதிபதிகள் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளி நபர்களுக்கு கோர்ட்டுக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்து.
தீர்ப்பை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் வழக்கத்திற்கு மாறாக ஏராமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த திமுக தொண்டர்கள் நீதிமனறத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications