சிபிஎஸ்இ வினாத்தாள் லீக்கான விவகாரம்.. கூகுளின் உதவியை நாடிய டெல்லி போலீஸ்
சிபிஎஸ்இ பாடத்திட்ட வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் கூகுளுக்கு டெல்லி போலீஸ் கடிதம் எழுதியுள்ளது.
Recommended Video

டெல்லி: சிபிஎஸ்இ பாடத்திட்ட வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் கூகுளுக்கு டெல்லி போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. எந்த இமெயில் முகவரியில் இருந்து வினாத்தாள் அனுப்பப்பட்டது என தெரிவிக்க கோரி டெல்லி போலீசார் கூகுள் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒருசில பாடங்களுக்கான வினாத்தாள்கள் இணையதளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
டெல்லியில் வாட்ஸ்அப் மூலம் சிபிஎஸ்இ கேள்வித்தாள் பரவியது. 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10-ம் வகுப்பு கணித தேர்வு பாட வினாத்தாளும் வெளியானது.

கூகுளுக்கு கடிதம்
இதையடுத்து அந்தப் பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாற்று தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியானது தொடர்பாக கூகுள் நிறுவனத்துக்கு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இமெயில் முகவரி
சிபிஎஸ்இ தலைவருக்கு இ- மெயிலில் வினாத்தாள் நகல் அனுப்பப்பட்டது தொடர்பாக டெல்லி போலீசார் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூகுளுக்கு கோரிக்கை
எந்த இ.மெயில் முகவரியிலிருந்து வினாத்தாள் நகல் அனுப்பப்பட்டது என்பதை தெரிவிக்குமாறு டெல்லி போலீசார் கூகுள் நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

144 தடை ஆணை
இதனிடையே டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீடு உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தை தடுக்க
சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியானதையடுத்து மறுதேர்வு நடத்துவதை கண்டித்து குஷாக் சாலை பகுதியில் போராட்டம் நடப்பதை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
CBSE ஓஎஸ்எம் போர்ட்டல் ஹேக்கிங் சர்ச்சை: சோதனைத் தளம் மட்டுமே பாதிக்கப்பட்டது.. சிபிஎஸ்இ விளக்கம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications