ஹப்பா... 3 வருடத்தில் டெல்லியில் 83 சதவீத வாகனங்கள் திருட்டாம் - சொல்கிறது மத்திய அரசு!
டெல்லி: இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வாகனங்கள் திருடுப் போவது கடந்த 3 ஆண்டுகளில் 83 சதவீதமாக உயர்ந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வரை 26,650 வாகன திருட்டு வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும், கடந்த ஆண்டு இது 23,411 ஆக இருந்ததாகவும், 2013-ல் 14,936 ஆகவும், 2012-ல் 14,446 ஆகவும் இருந்ததாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கணக்குபடி சராசரியாக ஒரு நாளைக்கு 88 வாகனங்கள் திருட்டுப் போகிறது. இந்த ஆண்டு திருட்டுப் போன வாகனங்களில் 1,676 வாகனங்கள் மீட்கப்பட்டுவிட்டதாகவும், 13 வாகன திருட்டுக் கும்பல்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை விவகார இணை அமைச்சர் ஹரிபாய் பரதிபாய் சௌத்ரி கூறினார்.
மேலும் அவர் திருட்டுப் போன வாகனங்களுக்காக டெல்லி போலீஸ் ஒரு ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் திருட்டுப் போன வாகனத்தின் விவரங்களை பதிவு செய்தல், முதல் தகவல் அறிக்கை பெறுதல், வாகன காப்பீடு பெறுதல் போன்றவற்றை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications