ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு திருமணத்தையே நிறுத்திய மணமகன்.. டெல்லியில் பரபரப்பு
திருமணத்தின் முதல் நாளன்று ரூ.5 லட்சம் வரதட்சிணை கேட்டு திருமணத்தை மணமகன் நிறுத்தியதாக மணப்பெண் வீட்டார் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Subscribe to Oneindia Tamil
புது டெல்லி: டெல்லியில் பெண் அழைப்பின்போது பெண் வீட்டாரிடம் ரூ.5 லட்சம் வரதட்சிணை கேட்டு அவர்களால் தர இயலாததால் திருமணத்தை நிறுத்தினார் மணமகன்.
தெற்கு டெல்லி சங்கம் விகார் பகுதியைச் சேர்ந்தவர் கசாலா ஷீன். இவருக்கும் நொய்டாவைச் சேர்ந்த ரஷீது அஹமது அன்சாரி என்பவருக்கும் மார்ச் 25-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் திருமணத்திற்கு முதல்நாள் மணமகன் ரஷீது மணமகள் வீட்டாரிடம் ரூ. 5 லட்சம் வரதட்சணை கேட்டு அவர்களால் தர இயலாததால் திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரஷீது மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் கசாலா புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின்பேரில் போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications