ரூபாய் நோட்டு செல்லாது… எதிர்க்கட்சிகள் அமளி.. 9வது நாளாக முடங்கிய ராஜ்ய சபா
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக விவாதிக்க மோடி அவைக்கு வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 9வது நாளாக ராஜ்ய சபா இன்றும் முடங்கியது.
டெல்லி: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க மோடி அவைக்கு வர வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜ்ய சபா நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 9வது நாளாக ராஜ்ய சபா தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.
கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என அனைத்தும் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக ராஜ்ய சபாவில் விவாதிக்க வேண்டும் என்று கோரி வருகிறது. மேலும், ராஜ்ய சபாவிற்கு பிரதமர் மோடி வந்து விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரி அமளியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு ராஜ்ய சபா தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுந்து மோடி அவைக்கு வர வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகர் குரியன் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி வந்தனர். இதனை கட்டுப்படுத்த சபாநாயகர் முயன்றார்.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து முதல் 30 மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்ட ராஜ்ய சபா பின்னர் 12 மணி வரையும் அடுத்து மதியம் 2 மணி வரையும் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 2 மணிக்கு ராஜ்ய சபா கூடியது. அப்போதும், எதிர்க்கட்சியினர் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக பல கேள்விகளை எழுப்பினார்கள். இந்தப் பிரச்சனைக்கு அரசு பதில் சொல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள், வங்கியில் உள்ள பணத்தை எடுப்பதை தடுக்க பிரதமருககு உரிமை இல்லை என்றும் கூறிய காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா, அரசியல் சட்டத்தின் 300வது பிரிவை சுட்டிக்காட்டி பேசினார். இதற்கு பதில் அளித்த சபாநாயகர் குரியன் இதற்கு அரசுதான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
இதனையடுத்து, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் குரியன் அவையை நாளை வரை ஒத்தி வைத்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications