ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தால் மட்டும் பயங்கரவாதம் ஒழிந்துவிடுமா? உத்தவ் தாக்கரே 'பொளேர்'
ரூபாய் நோட்டு பிரச்னையில் மக்களை தேசவிரோதிகளாக சித்திரிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
மும்பை: ரூபாய் நோட்டு பிரச்னை குறித்து விமர்சிக்கும் மக்களை தேசத் துரோகிகளாகச் சித்திரிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடக் கூடாது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தால் மட்டும் பயங்கரவாதம் ஒழிந்துவிடுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் அணிதிரண்டுள்ளன.

இந்தச் சூழலில் மத்தியிலும், மகாராஷ்டிரத்திலும் பாஜக தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, மும்பையில் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போதுஅவர் கூறியதாவது:
ஏற்கனவே, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைத் திரும்பப் பெற்றதால் பயங்கரவாத நடவடிக்கைகள் வலுவிழந்துவிடும் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை அது சாத்தியமென்றால், உலக நாடுகள் அனைத்தும் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து பயங்கரவாதத்தை வேரறுத்துவிடலாமே? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் மத்திய அரசின் இந்த அறிவிப்பால், சாமானிய மக்கள் வங்கிகளுக்கு முன்பு நீண்ட வரிசையில் காத்து நின்று அவதிக்குள்ளாகின்றனர். அவர்களுக்கு தேசப்பற்றை மத்திய அரசு கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. வெகுஜன மக்களின் உழைப்பில் கிடைத்த தொகையைக் கொண்டுதான் நாட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
எனவே, ரூபாய் நோட்டு பிரச்னையை குறித்து விமர்சிப்பவர்களை தேசவிரோதிகள் என்றும், ஆதரிப்பவர்கள் தேசப்பற்றாளர்கள் என்றும் முத்திரை குத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என்றார் உத்தவ் தாக்கரே.
இதனிடையே, உத்தவ் தாக்கரேவை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மும்பையில் சந்தித்துப் பேசினார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி கடந்த வாரம் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில், மத்தியில் ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் கலந்து கொண்டது. இதனையொட்டி இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், சிவசேனாவின் முதன்மை செய்தித் தொடர்பாளர் ஹர்ஷல் பிரதான் இந்த சந்திப்பு குறித்து கூறுகையில், "தனது மகளின் திருமணத்திற்கு உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக கட்கரி வந்திருந்தார்' என்றார்.
ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து உத்தவ் தாக்கரேவின் சந்தேகங்களைப் போக்க, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
தாக்கரேவுடன் ராஜ்நாத் சிங் பேசியபோது ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்பட்ட விவகாரத்தை எதிர்த்து மம்தா நடத்திய பேரணியில் சிவசேனை கட்சி கலந்து கொண்டதற்கு பாஜகவின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications