ஹரியானா, பஞ்சாப்பிலும் பரவும் ”டெங்கு” அரக்கன் - இரு மாநிலங்களிலும் 4 பேர் பலி!
சண்டிகர்: ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மிகக் குறுகிய காலத்திலேயே 2 பேர் பலியாகியுள்ள நிலையில் ஹரியானாவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் அதிகபட்சமாக குர்கான் மாவட்டத்தில் 228 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இருப்பினும் மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பொதுமக்கள் யாரும் பதட்டம் அடைய வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இரு மாநிலங்களிலும் சேர்த்து இதுவரை 1,400 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதித்து இருப்பதாகவும், 2 பேர் பலியாகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப்பிலும் 2 பேர் பலியாகிய நிலையில், புதிதாக ஆயிரம் பேர் டெங்கு பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இரு மாநிலங்களிலும் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications