டெல்லியில் கொட்டும் “பனி மூட்டம்”.. எதிரில் வருவோர் தெரியவில்லை- 14 ரயில்கள் ரத்து
டெல்லி: டெல்லியில் நிலவி வருகின்ற கடும் பனி மூட்டத்தால் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், டெல்லிக்கு வந்த ரயில்களும் தாமதமாக வந்து சேர்ந்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் கடும் குளிரும், அடர்ந்த பனி மூட்டமும் நிலவி வருகிறது. இதே நிலை இன்று காலையும் நீடித்தது.

இதைப்போல கடும் பனிமூட்டத்தால் காலை 5.30 மணியளவில் 200 மீட்டர் தூரத்தில் உள்ள பொருட்களையே மக்களால் பார்க்க முடிந்தது. இந்த பனிமூட்டத்தால் சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
மேலும் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிப்படைந்தது. டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லிக்கு பல ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன.
இதனால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இருப்பினும் விமான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இன்று காலை டெல்லியில் வெப்ப 4.2 டிகிரி செல்சியசாக பதிவானது. இது வரை பதிவானதில் மிகுந்த குறைந்த அளவு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications