யாரிடமும் சொல்லக்கூடாது.. மிரட்டி மிரட்டியே பெண் போலீஸ் மகளை 5 மாதமாக பலாத்காரம் செய்த துணை கமிஷனர்!
மகாராஷ்டிராவில் பெண் போலீஸ் ஒருவரின் மகளை துணை கமிஷனர் மிரட்டி மிரட்டி மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

அவுரங்காபாத்: மகாராஷ்டிராவில் பெண் போலீஸ் ஒருவரின் மகளை துணை கமிஷனரே மிரட்டி மிரட்டி 5 மாதங்களாக மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுமிகள், இளம் பெண்கள், மூதாட்டிகள் என்ற பாகுபாடின்றி பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன.
உலகில் பெண்களுக்கு சற்றும் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது. இதனை மத்திய அரசு மறுத்துள்ளபோதும் காவல்துறையில் பணியாற்றுபவரின் குழந்தைகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

துணை கமிஷனர்
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் துணை கமிஷனராக பணியாற்றி வருபவர் ராகுல் ஸ்ரீராம். இவருக்கு பெண் போலீஸ் ஒருவர் பழக்கமானார்.

சகஜமாக பழகிய பெண்
இந்நிலையில் மகளின் வேலை தொடர்பாக ராகுல் ஸ்ரீராமிடம் பேசிய அந்த பெண் போலீஸ் தனது 23 வயது மகளை அவருக்கு அறிமுகம் செய்துள்ளார். அம்மாவுக்கு தெரிந்தவர்தானே என துணை கமிஷனருடன் சகஜமாக பழகியுள்ளார் அந்த 23 வயது இளம்பெண்.

வேலைக்கு உறுதி
பெண் போலீஸின் மகளை அடைய திட்டமிட்ட துணை கமிஷனர் உனக்கு வேலை வாங்கி தருகிறேன் என உறுதியளித்துள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும் அவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

மிரட்டி பலாத்காரம்
தனது ஆசையை நிறைவேற்ற எண்ணிய துணை கமிஷனர் ராகுல் ஸ்ரீராம், கடந்த பிப்ரவரி மாதம் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தனது அம்மா உட்பட வேறு யாரிடமுடம் இதுகுறித்து மூச்சுவிடக்கூடாது என மிரட்டியுள்ளார்.

மிரட்டி மிரட்டியே..
இதனால் மிரண்டு போன அந்த பெண்ணும் யாரிடமும் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே நொந்துள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட ராகுல் ஸ்ரீராம் தேவைபடும் போதெல்லாம் அந்த பெண்ணை மிரட்டி மிரட்டியே தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கதறிய மகள்
கடந்த 21ஆம் தேதியும் துணை கமிஷனர் ராகுல் ஸ்ரீராம் தனது காம வேட்டையை அரங்கேற்றியுள்ளார்.ஒரு கட்டத்துக்கு மேல் இந்த வேதனையை தாங்க முடியாத மகள் இதுகுறித்து தனது தாயாரிடம் கூறி கதறியுள்ளார்.

துணை கமிஷனர் மீது வழக்குப்பதிவு
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் போலீஸ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசாரும் துணை கமிஷனர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லீவில் எஸ்கேப்
இதனையறிந்த ராகுல் ஸ்ரீராம் விடுப்பு எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் இந்த புகார் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications