நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சாமியார் ராம் ரஹிம் மீதான பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை!
டெல்லி: தேரா சச்சா அமைப்பு தலைவர் சாமியார் ராம் ரஹிம் மீதான பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை இதுதான்:
2002ம் ஆண்டு ஏப்ரலில், ஒரு அனாமதேய கடிதம் பஞ்சாப்-ஹரியானா ஹைகோர்ட்டுக்கு வந்தது. அதில் தன்னை ராம் ரஹிம் சிஷ்யை என கூறிக்கொண்ட ஒரு பெண், சாமியார் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

2002 செப்டம்பர் 3ல், இந்த கடிதத்தை ஆதாரமாக கொண்டு, ஹைகோர்ட் தானாக முன்வந்து எடுத்தது. சிர்சா மாவட்ட நீதிமன்றம் இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டது.
2002 செப்டம்பரில், மாவட்ட நீதிமன்றம், பிறப்பித்த உத்தரவில், மத்திய புலனாய்வு அமைப்புதான் இதை விசாரிக்க வேண்டும் என கூறியது.
2002 செப்டம்பர் 24ல், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஹைகோர்ட் பரிந்துரைத்தது. 6 மாதங்களுக்குள் அறிக்கை வழங்க வலியுறுத்தியது.
2002 டிசம்பரில் சிபிஐயால் ராம் ரஹிம் சிங் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2007 ஜூலையில், சிபிஐ இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
2008 செப்டம்பர் 6ம் தேதி, சிபிஐ சிசறப்பு நீதிமன்றம், ராம் ரஹிம் மீது பலாத்காரம், குற்றச்செயல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
2011 ஏப்ரல் 5ம் தேதி, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அம்பாலாவிலிருந்து, பஞ்குலாவுக்கு மாற்றப்பட்டது.
2017 ஜூலை 11ல், விசாரணையை விரைந்து முடிக்குமாறு, சிபிஐ நீதிமன்றத்திற்கு, ஹைகோர்ட் உத்தரவிட்டது.
2017 ஆகஸ்ட் மாதம், வாதங்கள் நிறைவடைந்தது. ஆகஸ்ட் 25ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. நீதிபதி ஜக்தீப் சிங் இவ்வுத்தரவை பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications