இவ்வளவு விஷயம் இருக்கா?.. நிர்மலா சீதாராமன் பயணித்த போர் விமானத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா?
பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் போர் விமானத்தில் பறந்து இருக்கிறார்.
ஜெய்ப்பூர்: பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் போர் விமானத்தில் பறந்து இருக்கிறார். ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூர் விமான படை நிலையத்தில் இருந்து அவர் பயணம் செய்துள்ளார்.
அவர் சுகோய் 30எம்கேஐ விமானத்தில் பறந்து இருக்கிறார். இந்த விமானத்திற்கு நிறைய சிறப்பம்சங்கள் இருக்கிறது.
பார்க்க மிகவும் சிறய விமானம் போல இருந்தாலும் இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இந்திய விமானப்படையின் 'கெத்து' விமானங்களில் இதுவும் ஒன்றாகும்.

எங்கு உருவானது
இந்த விமானம் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாராகி இருக்கிறது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகள் நிறுவனம் இதை உருவாக்கி இருக்கிறது. ரஷ்யாவின் சுகோய் 30 விமானத்தை அடிப்படையாக கொண்டு இந்த விமானம் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறியது
இதில் இரண்டு என்ஜின்கள் மட்டுமே இருக்கும். அதேபோல் இரண்டு பேர் மட்டுமே உட்கார முடியும். 2004ம் ஆண்டு இந்திய விமான படையில் இது சேர்ந்தது. தற்போது 214க்கும் அதிகமான சுகோய் 30 எம்கேஐ விமானம் இந்திய விமான படையிடம் இருக்கிறது.

சிறப்பம்சம்
இந்த விமானம் சிறியதாக இருந்தாலும் நிறைய சிறப்பம்சம் கொண்டது. இது அணு ஆயுதத்தை தாங்கி செல்ல கூடியது. எதிரி நாட்டிற்குள் மிக எளிதாக உட்புறம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது இது. 2,100 கிமீ/நே வேகம் செல்லக்கூடிய அளவிற்கு வலிமையானது இது.

கெத்து
இந்த போர் விமானத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் பறந்ததற்கும் முக்கிய காரணம் இருக்கிறது. 2004க்கு பிறகு இந்தியா விமான படை பயன்படுத்திய முக்கியமான விமானம் இது மட்டுமே,. இதுவே அதிக முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே போர் வரும் பட்சத்தில் விமான படையிடம் இருக்கும் 214 சுகோய் ரக விமானமும் முதல் ஆளாக களம் இறங்கும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications