ராணுவத்தில் இணைந்தது ஆகாஷ் ஏவுகணை... இலக்கை துல்லியமாகத் தாக்கக் கூடியது!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி நடத்தப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.
இந்திய வான் வெளி பாதுகாப்பிலும், ஆகாஷ் ஏவுகணையை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டு வந்தது. இதையடுத்து இறுதி வடிவம் பெற்று பல்வேறு சோதனைகளைக் கடந்து ஆகாஷ் ஏவுகணை ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் ஆகாஷ் ஏவுகணையை ராணுவத்தில் இணைத்தார்.
வான்வெளியில் 25 கிலோ மிட்டர் தூரத்தில் பறக்கும் எதிரியின் ஹெலிகாப்டர், விமானம், மற்றும் ஆளில்லா விமானங்களை நிலத்திலிருந்து தாக்கும் வல்லமை கொண்டது ஆகாஷ் ஏவுகணை. சூப்பர்சானிக் வகையைச் சேர்ந்த ஆகாஷ் ஏவுகணை முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications