தேவயானி விவகாரம்: வருத்தம் தெரிவித்தால் போதாது அமெரிக்கா மன்னிப்பு கேட்கணும்- கமல்நாத்
டெல்லி: இந்திய துணை தூதரை கைது செய்து அவமானப்படுத்தியதற்கு அமெரிக்கா வருத்தம் தெரிவித்தால் போதாது மாறாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே விசா மோசடி வழக்கில் நியூயார்க் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவரின் ஆடைகளை களைந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் அவமானம் தாங்காமல் அவர் கதறியும் போலீசார் விடவில்லை.

இந்த சம்பவத்தை கண்டித்து மத்திய அரசு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர்களுக்கு வழங்கப்பட்ட ஏர்போர்ட் பாஸை வாபஸ் பெற்றது. மேலும் அமெரிக்க தூதரகத்திற்கு முன்பு இருந்த தடுப்புகளை இந்தியா அகற்றியது.
இதையடுத்து தேவயானி கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா வருத்தம் தெரிவித்தது.
இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் கமல்நாத் கூறுகையில்,
வருத்தம் தெரிவிப்பது போதாது மாறாக அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டு தாங்கள் செய்தது தவறு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போது தான் இந்தியா திருப்தி அடையும் என்றார்.












Click it and Unblock the Notifications