இனி ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய 139க்கு போன் செய்தால் போதும்
டெல்லி: முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை இனிமேல் 139 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு எளிதில் ரத்து செய்யலாம்.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் போன் மூலம் டிக்கெட்டை ரத்து செய்யும் முறையை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று துவக்கி வைத்துள்ளார்.

ரயில் பயண டிக்கெட்டுகளை கவுண்டருக்கே சென்று ரத்து செய்யும்பட்சத்தில் கால விரயம் ஏற்பட்டு வந்தது. கால் வலிக்க வரிசையில் நின்று டிக்கெட் பதிவு செய்த பின்னர் அதை ரத்து செய்யவும் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை இருந்தது.
இந்தக் கஷ்டத்தைப் போக்க '139' என்ற எண்ணுக்கு அழைத்து டிக்கெட்டை ரத்து செய்யும் எளிய வசதியை கடந்த மத்திய பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார். இந்த திட்டத்திற்கான பணிகள் நிறைவடைந்து உள்ள நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் பிரபு, 'இந்த புதிய திட்டத்தின் படி, உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள், தங்களது டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் என்றால், '139' என்ற எண்ணுக்கு தொலைபேசியில் அழைத்து ரத்து செய்ய வேண்டிய டிக்கெட் பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
அப்போது, அந்த பயணிக்கு ஒன் டைம் பாஸ்வேர்டு வழங்கப்படும். பின்னர் அந்த பாஸ்வேர்டை ரயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் கொடுத்து, டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெறலாம் என்று கூறினார்.
உறுதிபடுத்தப்பட்ட டிக்கெட்டுகளை ரயில் கிளம்புவதற்கு 4 மணி நேரத்திக்கு முன்பு ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், ரத்துக்கான டிக்கெட் கட்டணம் கிடைக்காது என்ற திருத்தமும் கடந்த பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications