Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் மோடி, ஜெட்லியுடன் தயாநிதி மாறன் சந்திப்பு- ராஜ்நாத் சிங் தவிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரை மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின் போது, சன் குழும நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அனுமதி கிடைப்பதில் நீடித்து வரும் சிக்கல் குறித்து பிரதமருடன் அவர் பேசியதாக கூறப்படுகிறது. முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ, மத்திய அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்த வழக்குகளின் பின்னணியில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.

Did Dayanidhi Maran meet Arun Jaitley

நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை தயாநிதி மாறன் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து, இருவரும் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். சுமார் 10 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கத் தயாநிதி மாறன் முயன்றார். ஆனால், அதற்கான நேரம் கிடைக்கவில்லை' என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தனக்கு எதிராக நிலுவையில் உள்ள சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை வழக்குகள் குறித்தும், தனது சகோதரர் கலாநிதி மாறனின் தொலைக்காட்சி, பண்பலை வானொலிகளுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்க மத்திய உள்துறை மறுப்பது குறித்தும் நரேந்திர மோடி, அருண் ஜெட்லியுடன் தயாநிதி மாறன் பேசியதாகத் தெரிகிறது.

பிரதமர், நிதியமைச்சர் ஆகிய இருவரையும் திடீரென சந்தித்த தயாநிதி மாறன் பெரும் முயற்சி எடுத்தும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க முடியாமல் போனது.

கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிரான வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சன் டிவி குழும நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறையிடம் மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை வலியுறுத்தி வருகிறது. ஆனால், "வெளிநாடுகளில் இருந்து தவறான வழிகளில் செய்யப்படும் முதலீடுகள் பொருளாதாரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்' என்று கூறி, அந்தக் கோரிக்கையை மத்திய உள்துறை ஏற்கெனவே இரு முறை நிராகரித்து விட்டது.

இந்தப் பிரச்னையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால்தான், தயாநிதி மாறனைச் சந்திக்காமல் ராஜ்நாத் சிங் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+