பிரதமர் மோடி, ஜெட்லியுடன் தயாநிதி மாறன் சந்திப்பு- ராஜ்நாத் சிங் தவிர்ப்பு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரை மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின் போது, சன் குழும நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அனுமதி கிடைப்பதில் நீடித்து வரும் சிக்கல் குறித்து பிரதமருடன் அவர் பேசியதாக கூறப்படுகிறது. முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ, மத்திய அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்த வழக்குகளின் பின்னணியில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை தயாநிதி மாறன் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து, இருவரும் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். சுமார் 10 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கத் தயாநிதி மாறன் முயன்றார். ஆனால், அதற்கான நேரம் கிடைக்கவில்லை' என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தனக்கு எதிராக நிலுவையில் உள்ள சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை வழக்குகள் குறித்தும், தனது சகோதரர் கலாநிதி மாறனின் தொலைக்காட்சி, பண்பலை வானொலிகளுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்க மத்திய உள்துறை மறுப்பது குறித்தும் நரேந்திர மோடி, அருண் ஜெட்லியுடன் தயாநிதி மாறன் பேசியதாகத் தெரிகிறது.
பிரதமர், நிதியமைச்சர் ஆகிய இருவரையும் திடீரென சந்தித்த தயாநிதி மாறன் பெரும் முயற்சி எடுத்தும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க முடியாமல் போனது.
கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிரான வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சன் டிவி குழும நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறையிடம் மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை வலியுறுத்தி வருகிறது. ஆனால், "வெளிநாடுகளில் இருந்து தவறான வழிகளில் செய்யப்படும் முதலீடுகள் பொருளாதாரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்' என்று கூறி, அந்தக் கோரிக்கையை மத்திய உள்துறை ஏற்கெனவே இரு முறை நிராகரித்து விட்டது.
இந்தப் பிரச்னையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால்தான், தயாநிதி மாறனைச் சந்திக்காமல் ராஜ்நாத் சிங் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications