சீதையை மீட்க இலங்கைக்குப் போன அனுமார் "விசா" வைத்திருந்தாரா.. டிவிட்டரில் "கலகல"!
பாட்னா: கடவுளைக் கேள்வி கேட்க முடியுமா? தெரியவில்லை.. ஆனால் "கேஸ்" போட முடியும் என்பதை பீகார் வக்கீல் ஒருவர் நிரூபித்து விட்டார். பிறகென்ன. டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் பலர் காமெடி கலாட்டாக்களில் தீவிரமாகி விட்டனர்.
பலவிதமான கலாச்சாரம் பரவிக் கிடக்கும் நாடான இந்தியாவில் கடவுள் நம்பிக்கைக்கும் பஞ்சம் இல்லை. இப்படிப்பட்ட நாட்டில் கடவுளைக் கேள்வி கேட்பது என்பது ரொம்பவே சிக்கலானதுதான்.
ஆனால் சீதையை ராமர் கைவிட்டது தப்பு. அதுவும் சலவைத் தொழிலாளியின் பேச்சைக் கணக்கில் வைத்து அடிப்படை உண்மையைக் கூட அறிய முயலாமல் அவரை ஒதுக்கி வைத்த ராமரின் செயல் அநீதியானது என்று கூறி பீகாரில் ஒரு வழக்கறிஞர் கோர்ட்டில் கேஸ் போட்டு பரபரப்பைக் கிளப்பி விட்டார்.

ராமர் மீதே கேஸா
ராமர் மீதே கேஸா என்று பலரும் அதிர்ச்சியாகி விட்டனர். இந்த நிலையில் பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பலர் அனுமாரை வம்பிக்கிழுக்க ஆரம்பித்துள்ளனர்.
|
மை லார்ட்!
ரமேஷ் ஸ்ரீவத்ஸ் என்பவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், முதல் முறையாக நீதிபதிகள் அக்யூஸ்டைப் பார்த்து மை லார்ட் என்று சொல்லப் போகிறார்கள் என்று கூறியுள்ளார்.
|
ரகசிய ஆவணத்தை வெளியிடுங்க பாஸ்!
நடிகர் பரேஷ் ராவல் போட்டுள்ள டிவிட்டில், மோடி அரசு உடனடியாக குருஷேத்திரப் போர் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று கோருகிறேன் என்று கூறியுள்ளார்.
|
விசா இல்லாமல் போன அனுமார்
லக்ஷ் மகேஸ்வரி என்பவர் போட்டுள்ள டிவிட்டில், அடுத்து விசா இல்லாமல் இலங்கைக்குப் போன அனுமார் குறித்து விசாரிக்கக் கேட்கப் போகிறார்கள் என்று நக்கலடித்துள்ளார்.
|
ராமருக்காக ஆஜராக வரும் ராம்!
இது செம.. ராமருக்காக ஆஜராக நான் தயார் என்று ராம்ஜெத்மலானி கூறியதாக ஒரு கிண்டல் கட்டுரை இது.












Click it and Unblock the Notifications