ஜவஹர்லால் நேரு பல்கலையிலிருந்து யாரையும் வேலைக்கு எடுக்க மாட்டோம் என டாடா சொன்னாரா?
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் யாரையும் இனி வேலைக்கு எடுக்கப்போவதில்லை என தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியதாக வெளியான தகவலை டாடா குழுமம் மறுத்துள்ளது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்ட மாணவர் சங்க தலைவர் கன்ஹையா குமார் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக, குமார் இந்தியாவுக்கு எதிராக எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இனி வரும் காலங்களில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து எந்தவொரு மாணவனையும் தங்களது டாடா குழுமம் பணிக்கு எடுத்துக் கொள்ளாது என அந்நிறுவனத்தின் தலைவர் டாடா, மும்பையில் நடைபெற்ற மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.
இதற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பியது. அதனைத் தொடர்ந்து டாடா குழுமம் தனது டிவிட்டர் பக்கத்தில் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை இனி வேலைக்கு எடுத்துக் கொள்ள மாட்டோம் என தாங்கள் ஒருபோதும் கூறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications