தன் சிலையைத் தானே திறந்து வைத்த தானைத் தலைவன் மாரடோனா.. கொல்கத்தாவில் கோலாகலம்
பிரபல கால்பந்து வீரர் டியகோ மாரடோனாவிற்கு கொல்கத்தாவில் சிலை திறக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

கொல்கத்தா: பிரபல கால்பந்து வீரர் டியகோ மாரடோனா கொல்கத்தா வந்துள்ளார். மூன்று நாள் பயணமாக அவர் கொல்கத்தாவில் தங்கி இருக்கிறார்.
அன்னை தெரசா உருவாக்கிய தொண்டு நிறுவனங்களுக்காக நேற்று அவர் கால்பந்து விளையாடினார். இந்த நிகழ்வில் கலந்து கொளவதற்காகவே அவர் முக்கியமாக இந்தியா வந்துள்ளார்.
அவர் கால்பந்து போட்டியில் விளையாடுவது மட்டும் இல்லாமல் கங்குலி நடத்தும் கிரிக்கெட் போட்டி ஒன்றிலும் கலந்து கொள்கிறார். அதேபோல் நேற்று அவருக்கு கொல்கத்தாவில் சர்ப்ரைசாக சிலை ஒன்று நிறுவப்பட்டது.

கொல்கத்தாவில் மாரடோனா
பிரபல அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மாரடோனா தற்போது கொல்கத்தா வந்துள்ளார். அவர் கொல்கத்தாவில் இருக்கும் 'ஸ்ரீபூமி' கால்பந்து கிளப்புடன் நடந்த கால்பந்து போட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அன்னை தெரசா உருவாக்கிய தொண்டு நிறுவனங்களுக்கு பணம் சேர்ப்பதற்காக இந்த போட்டி நடந்தது. இதில் பேசிய அவர் ''நான் கால்பந்து உலகில் கடவுள் இல்லை. நான் சாதராண வீரன்தான். கொல்கத்தாவில் இருப்பது பிடித்து இருக்கிறது'' என்றார்.

உதவித்தொகை
இந்த நிலையில் அந்த நிகழ்வில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாரடோனா நிதி உதவி அளித்தார். ஒரு குழந்தைக்கு 10 ஆயிரம் வீதம் 11 குழந்தைக்கு பணம் அளித்தார். மேலும் அந்த தொண்டு நிறுவனத்திற்காக ஏசி வசதி உள்ள ஆம்புலன்ஸ் ஒன்றும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு அவர் தன் நெருங்கிய தோழியுடன் வந்து இருந்தார்.

சிலை திறக்கப்பட்டது
இந்த நிகழ்வில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் மாரடோனாவிற்கு சிலை திறக்கப்பட்டது. மாரடோனா இந்த சிலையை திறந்து வைத்தார்.1986 அர்ஜெண்டினா அணிக்காக அவர் கால்பந்து உலகக் கோப்பை வாங்கி கொடுத்த புகைப்படம் சிலையாக செய்யப்பட்டு இருந்தது. இந்த சிலை 12 அடி இருந்தது. அதை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருப்பதாக மாரடோனா பேட்டி அளித்துள்ளார்.

கங்குலியுடன் கிரிக்கெட் போட்டி
அவரின் இந்திய பயணத்தில் இன்றைய நிகழ்வாக அவர் கங்குலியை சந்திக்க இருக்கிறார். கங்குலி நடந்தும் கால்பந்து போட்டியில் இவர் மரியாதை நிமித்தமாக கலந்து கொள்வார். இது பெரிய அளவில் கால்பந்து குறித்த கருத்தரங்கம் மாதிரி நடக்க இருக்கிறது. மாரடோனா, கங்குலியுடன் கிரிக்கெட் விளையாடவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications