மோடி அலை வீசினால் ஏன் பாஜக தலைவர்கள் தொகுதி மாற வேண்டும்? திக்விஜய்சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தலில் மோடி அலை வீசுவதாக கூறிக் கொள்ளும் பாரதிய ஜனதா தலைவர்கள் ஏன் தொகுதி மாறிப் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக திக்விஜய்சிங் கூறுகையில், நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக பாரதிய ஜனதா தலைவர்கள் பேசி வருகின்றனர். ஆனால் முரளி மனோகர் ஜோஷி, சித்து, லால்ஜி தாண்டன் உள்ளிட்டோர் ஏன் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளைக் கைவிட்டுவிட்டனர்.

மோடி அலை வீசுவதாக நம்பினால் வெற்றி பெற்ற தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட வேண்டியதுதானே? பாஜகவின் மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங்குக்கு ஏன் சீட் தரவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications