அரசியல்வாதிகள், அதிகாரிகளின் செல்லப்பிள்ளை.. 'சினிமா தாதா' திலீப்பை போலீஸ் கைது செய்தது எப்படி?
திருவனந்தபுரம்: மலையாள சினிமா உலகில் அரசியல் தொடர்புகள், அடாவடிகளுக்கு பஞ்சமில்லை. அதில் திலீப்பும் விதிவிலக்கில்லை.
நடிகர்களின் அரசியல், தொழிலதிபர்கள், போலீசாருடனான செல்வாக்கு, அவர்களை பெரும் தாதா போல வலம் வரச் செய்துள்ளது. பாவன கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திலீப் அதில் மன்னன்.
மீடியாக்களின் தொடர் அழுத்தம் காரணமாகத்தான் திலீப் கைது செய்யப்பட்டுள்ளாரே தவிர, அவருக்கு முதல்வர் பினராயி விஜயன் முதல் ஆளும் கட்சியின் அனைத்து ஆதரவும் கிடைத்தே வந்துள்ளது.

முதல்வர் திடுக்
பாவனா கடத்தல் சம்பவம் நடந்து ஐந்து மாதங்கள் ஆனபோதிலும், குற்றவாளியை போலீசார் கைது செய்யவில்லை. விசாரணை நடைபெற்றபோதே, இதில் சதி திட்டம் இருப்பதாக தெரியவில்லை என பினராயி விஜயன் கூறினார். பாதிக்கப்பட்ட பெண் மீதே குற்றம் சொல்லுவதை போல முதல்வர் பேச்சு உள்ளதாக கண்டனங்கள் எழுந்தன.

டிவி சேனல்
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டிவி சேனல் கைராலியும், திலீப்புக்கு ஆதரவு செய்திகளை கொடுத்து வந்தது. சேனல் நிர்வாகி சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டியயும் திலீப்புக்கு ஆதரவுகரம் நீட்டியதாக கூறப்படுகிறது.

எம்எல்ஏ டிரைவர்
பாவனாவை கடத்தி துன்புறுத்திய முக்கிய குற்றவாளி பல்சர் சுனில், நடிகர் முகேஷிடம் ஓராண்டுக்கும் மேலாக கார் டிரைவராக வேலை பார்த்துள்ளார். முகேஷ் நடிகர் மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவுமாகும். பல்சர் சுனில் குறித்து தெரியாமல் வேலைக்கு வைத்திருந்ததாக முகேஷ் இப்போது கூறிவருகிறார். ஆனால், இதுபோன்ற ரவுடிகளை டிரைவர் என்ற பெயரில் வேலைக்கு வைத்துக்கொண்டு எதிரிகளை பந்தாடுவது மலையாள திரையுலகின் சில நடிகர்கள் வாடிக்கை என்பதை மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

கோபம்
ஆளும்கட்சி எம்எல்ஏக்களும், நடிகர்களுமான முகேஷ் மற்றும் கணேஷ் ஆகியோர் திலீப்புடன் நல்ல தொடர்பில் இருந்துள்ளனர். எனவேதான், "திலீப் குற்றமற்றவர் என்று இப்போதும் நம்புகிறீர்களா"? என்ற நிருபரின் சாதாரண ஒரு கேள்விக்கு, இருவருமே எரிந்துவிழுந்த காட்சியை கேரளா நேற்று பார்த்தது.

நீக்க முடியாது
திலீப் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்ட பிறகும்கூட, மலையாள சினிமா சங்க தலைவரும், மார்க்சிஸ்ட் எம்பியுமான இன்னோசன்ட், பாதிக்கப்பட்ட நடிகையும், குற்றம்சாட்டப்பட்டவரும், இந்த சங்கத்தின் பிள்ளைகள்தான் என்று கூறி திலீப்புக்கு வக்காலத்து வாங்கினார். மீடியாக்களின் கண்டனத்தையடுத்து மக்கள் கொதிப்படைந்ததால்தான் திலீப் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார்.

அதிகாரி ஆதரவு
பாவனா வழக்கில் முதல் ரவுண்டு விசாரணை முடிவடைந்த நிலையில், போலீஸ் கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஒருவர், திலீப்பின் நெருங்கிய நண்பர் நாதிர்ஷாவை ஹோட்டலில் வைத்து சந்தித்து, வழக்கின் நிலை குறித்து விவரித்துள்ளார். இந்த செய்தியும் வெளியில் வந்தது. இப்படி அரசியல், அதிகாரிகள் மட்டத்தில் திலீப்புக்கு செல்வாக்கு அதிகம்.

தொழில்கள்
இதனால்தான் ரெஸ்டாரண்டுகள், ரியல் எஸ்டேட் தொழில் என பல தொழில்களை நடிகர்கள் நடத்தி வருகிறார்கள். மீடியாக்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டதன் விளைவாகவும், பாதிக்கப்பட்ட பெண் பாவனா உறுதியாக இருந்ததாலும்தான் வேறு வழியின்றி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கேரள காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமை இப்படித்தான் முதல்வரை விமர்சனம் செய்து வருகிறது. எனவே மீடியாக்களின் தொடர் நெருக்கடி இல்லாவிட்டால் திலீப்பை சட்டத்தின் ஓட்டைகள் வழியாக தப்பிக்கச் செய்ய கேரள அதிகார வர்க்கம் அனைத்து செயல்களையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications