இரட்டை இலைக்காக லஞ்சம்… தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல்... கோர்ட் அனுமதி
டெல்லி: இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதையடுத்து டெல்லி போலீஸார் நட்சத்திர விடுதிகளில் மேற்கொண்ட சோதனைகளில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரா என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.1.30 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணை
இதைத் தொடர்ந்து, டெல்லி போலீசாரிடம் கடந்த 22ஆம் தேதி தினகரன் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து 4 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

ஆடியோ உரையாடல்
இருவரும் பேசிய ஆடியோ உரையாடல் ஆதாரத்தை சமர்ப்பித்தும் தினகரன் ஒத்துக் கொள்வதாயில்லை. இதைத் தொடர்ந்து சுகேஷை தினகரன் இருந்த அறைக்கு அழைத்து சென்று நேருக்கு நேர் விசாரணை நடத்தினர்.

ஒப்புதல்
அப்போது ஹவாலா கும்பல் மூலம் தினகரன் தமக்கு பணம் கொடுத்ததாக சுகேஷ் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து உண்மையை ஒப்புக் கொண்ட தினகரன் நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

ஆஜர்
இந்நிலையில், தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் தினகரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் நண்பர் மல்லிகார்ஜூனாவும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

போலீஸ் கஸ்டடி
இதனிடையே, தனக்கு ஜாமீன் வேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் தாக்கல் செய்துள்ளார். அதே நேரத்தில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளார். இதில் 7 நாட்களுக்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தினகரனை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதனை போலீஸ் தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. இதனையடுத்து, 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி! -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
இனிமே கரூர் நாங்கதான்.. அடித்து சொல்லும் அதிமுக! கோவைக்கு ஜாகையை மாற்றிய செ.பா.. செம குஷியில் வி.பா! -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி!












Click it and Unblock the Notifications